1 comments

பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார் : பழ.நெடுமாறன்

பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார் : பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியை முழுமையாக மறுத்திருக்கிறார், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினரைப் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... பிரபாகரன் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

தற்போது, இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு, சர்வதேச சமுதாயம் முழுவீச்சில் இலங்கை அரசை வலியுறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தச் சூழலில், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்களைப் பரப்பி, சர்வதேச சமுதாயத்தின் பார்வையை திசைத் திருப்பவே இலங்கை அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தமிழ் மக்களும், சர்வதேச சமூகமும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார் பழ.நெடுமாறன்.
 
Source : Vikatan

1 comments

இன்று இரு தகவல்கள் (தேர்தல்)


செய்தி 1 :
இடம் : மதுரை
DMK (அண்ணன் அழகிரி) ஒரு ஓட்டுக்கு 500Rs கொடுத்து இருக்காங்க.

செய்தி 2 :
இடம் : திருச்சி
DMDK (விஜயகாந்த் கட்சி விஜயகுமார்) மட்டும் தான் இது வரை வீட்டுக்கு வந்து வோட்டு கேட்டு இருக்காங்க (வோட்டு மட்டும் தான்)

4 comments

Dr.Regina Papa - உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தவர் - தே.மு.தி.க வேட்பாளர்

Dr. Regina Papa has forty years of experience in higher education. She was Professor and Head of the Department of Women’s Studies at Alagappa University in India and served at Executive Director of the Asian University for Women’s Access Academy. A graduate of the University of Madras (one of India’s oldest universities), she earned a doctorate from Madurai Kamaraj University and went on to establish the first Women’s Studies Department in India at Alagappa, as well as becoming the first woman registrar of a major university in India. Over the course of Dr. Papa’s career, women’s studies and women’s development have served as the primary focus of her work. In addition to teaching courses in gender theory and research, she has run numerous action-oriented research projects, such as a technology centre for rural girls and a free legal aide centre for women.


அறிஞர் பெர்னாட்ஷாவால் ஆரம்பிக்கப்பட்டு லண்டனிலிருந்து வெளிவரும் 'நியூ ஸ்டேட்ஸ்மென்' பத்திரிகை, வருடாவருடம், 'உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தவர்கள்' என பத்துப் பேரைப் பிரகடனப் படுத்தி வருகிறது. 2005-ம் வருடம், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பத்துப் பேரைக் குறிப்பிட்டது அந்தப் பத்திரிகை. அதுபோல இந்த ஆண்டும் 'நியூ ஸ்டேட்ஸ்மென்' தேர்ந்தெடுத்துள்ள பத்துப்பேரில், சிவகங்கையில் ப.சிதம்பரத்தோடு மோதும் தே.மு.தி.க. வேட்பாளரான பர்வத ரெஜினா பாப்பாவும் ஒருவர்.

சிதம்பரத்துக்கு எதிராகப் பிரசாரங்களில் அனல் கக்கி வரும் தே.மு.தி.க-வினர், ரெஜினா பாப்பாவுக்குக் கிடைத்துள்ள இந்த உலகளாவிய அங்கீகாரத்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள். காங்கிரஸ் கூடாரமோ, இதனால் மேலும் கலவர மாகியிருக்கிறது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மகளிர் இயல் துறை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற ரெஜினா பாப்பா, தற்போது பங்களாதேஷிலுள்ள ஆசிய பெண்கள் பல்கலைக்கழகத்துக்கான பன்னாட்டு ஆலோசகராக இருக்கிறார்.

அந்த பல்கலைக்கழகத்தில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் சுமார் 150 பெண்களை தேடிப் பிடித்து அவர்களுக்கு உயர்கல்வி வழங்கியிருக்கிறார் ரெஜினா. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பற்பல கிராமங்களுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுத்து, பொது சுகாதாரத்தைப் பெருமளவில் மேம்படுத்தியிருக்கிறார். பெண்கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் ரெஜினா பாப்பாவின் கடுமையான பணிகளுக்காகத்தான், 'உலகத்தையே மாற்றுபவர்கள்' பட்டியலில் இவரை சேர்த்திருக்கிறது 'நியூ ஸ்டேட்ஸ்மென்.'

இது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பிரசாரத்தில் இருந்த பர்வத ரெஜினா பாப்பாவை சந்தித்தோம்.

''சிம்னி விளக்கில் படித்துப் பட்டம் வாங்கிய எனக்கு பாமர மக்களின் வலியும் வேதனை யும் நன்றாகத் தெரியும். பல் கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கு கிராமத்தில் போய் பணியாற்றவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், நான் பதவியிலிருந்த காலத்தில் கிராமங்களை நோக்கி ஓடினேன்; அந்த மக்களோடு ஒருத்தியாக வாழ்ந்திருக்கிறேன். இன்றைக்கு ஓட்டுக்காக பலபேர் இலங்கைத் தமிழருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால், இருபது வருடங்களுக்கு முன்பே நாங்கள் அந்த மக்களுக்காக, 'உலகத் தமிழர் பேரவை' என்ற அமைப்பின் மூலமாக நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறோம். சமீபத்தில்கூட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அடித்தட்டுப் பெண்கள் இருபத்தொன்பது பேருக்கு உயர்கல்வி படிப்பதற்காக ஆசிய பெண்கள் பல்கலைக்கழகத்தின் மூலமாக நான் பயிற்சியளித்திருக்கிறேன். இன்றைக்கு நான் ஒரு கட்சியை சேர்ந்தவளாக இருந்தாலும், எனக்கு அனைத்துக் கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், விஜயகாந்த் என்ற தலைவர் கிடைத்திருக்கிறார். இதெல்லாமே இந்த முறை சிதம்பரத்தின் பணநாயக அரசியலுக்கு முடிவு கட்டும். அப்புறம் பாருங்கள்... இந்த சிவகங்கையை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மாற்றிக் காட்டுகிறேன்!'' சொல்லிக்கொண்டே பிரசார வேனில் ஏறுகிறார் பர்வத ரெஜினா பாப்பா.

(நன்றி - விகடன்)

மேலும் இவரை பற்றிய விவரங்கள்

Book - Women, entrepreneurship and technology by B Regina Papa (Author) 

http://www.asianwindow.com/education/the-woman-who-could-change-the-world/

http://www.newstatesman.com/asia/2009/01/women-papa-india-auw

http://www.asian-university.org/documents/AccessAcademybrochure.pdf

எனக்கு இவங்க மேல நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா எதாவது பண்ணுவாங்க !

வாழ்த்துக்கள் ரெஜினா பாப்பா அவர்களே !!

9 comments

ஒரு M.P யின் சம்பளமும் அரசு சலுகைகளும்.

அரசியல் இப்போ எல்லாம் தொண்டு இல்லை, தொழில்.
ஒரு M.P யின் சம்பளமும் அரசு சலுகைகளும்.

    மாத சம்பளம் – Rs 12,000
    மாத அலுவலக செலவு – Rs 14,000
    மாத தொகுதி செலவு – Rs 10,000
    பயண செலவு – Rs 48,000 (Rs 8/ km)
    விடுதி – MP Hostel – இலவசம்
    மின்சாரம் – 50,000 units இலவசம்
    தொலைபேசி - 1, 70,000 calls இலவசம்
    தினசரி கூலி – 500 (during parliament meets)
    ரயில் பயணங்கள் – இலவசம் (unlimited) – 1st A/C
    விமானம் – 40 இலவச பயணங்கள் (P.A / மனைவிக்கும்)

ஒரு மாத செலவு - 2.66 லட்சங்கள்
ஒரு வருடத்துக்கு ஆகுர செலவு - Rs.32, 00,000/-
5 வருடங்களுக்கு - Rs. 1, 60, 00,000/-

534 முட்டாள்களுக்கு 5 வருடங்களுக்கு ஆஹும் செலவு – Rs. 8,54,40,00,000/- அதாவது 855 கோடி.

என்ன விஜயகாந்த் மாதிரி கணக்கு சொல்லி கலக்கிடோம்ல் !! எதுக்குனா, இப்படி தான் வேர்வை சிந்தி உழைக்கும் மக்களின் வரி பணம் வீணாகிறது. விலைவாசி rocket மாதிரி போகுது. ஆதலினால் ஓட்டு போடுங்கள். தயவு செய்து உங்கள் வாக்கு உரிமையை உபயோக படுத்துங்கள்.

ஒரு 5000 சம்பள வேலைக்கே ஒரு முதலாளி எவ்வளவு யோசிச்சு முடிவு பண்றார். இவ்வளவு சம்பளம் வாங்கும் M.P ஐ வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் ஆகிய நீங்கள் யோசிச்சு தேர்வு செய்யுங்கள். அவ்ளோ தான் சொல்லிட்டேன்.

5 comments

யோக நரசிம்மர் ஆலயத்திலிருந்து பிரசாரத்தை - மு.க.அழகிரி

நிறைந்த அமாவாசையில் தேர்தல் அலுவலகத்துக்கு பந்தக்கால் நட்டு, பௌர்ணமி தினத்தில் அதைத் திறந்து வைத்து... மறுநாளான 10-ம் தேதி, யோக நரசிம்மர் ஆலயத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் மு.க.அழகிரி!

காந்தி அண்ணிக்குக்கூட இஷ்டதெய்வம் யானை மலையிலிருக்கிற யோக நரசிம்மர்தான். வாராவாரம் சனிக்கிழமை அவங்க திருமோகூர் சக்கரத்தாழ்வார்கோயிலுக்குப் போறப்பெல்லாம் மறக்காம யோக நரசிம்மர் கோயிலுக்கும் போயிருவாங்க...'' என நரசிம்மர் சென்ட்டிமென்ட்டில்நனைகின்றனர் பகுத்தறிவுக் கட்சி உடன்பிறப்புகள்!

Source : Vikatan

ஊர்ல இருக்கவன் எல்லாம் தி.க கொள்கைன்னு சாமி கும்பிடாம இருக்கணும். அப்பா ராமர் engineer ஆன்னு கேப்பாரு, இவர் பையன் விஷ்ணு கோவில் (எதிரிகளை அளிக்கும் சக்தி கொண்டது, அதனால் நல்ல நாள் பாத்து அந்த கோவில் வாசல்ல தேர்தல் வேலைய தொடங்குகிறார், என்ன கொடுமை சரவணன் இது)!

அப்பா சொல்றத பையனும் கேக்குறது இல்ல...மருமகளும் கேக்குறது இல்லை. பொண்டாட்டி, கீப் (எனக்கு துணைவி ங்கற வார்த்தை எல்லாம் தெரியாது. நான் படிச்சப்போ என்னோட தமிழ் syllabus ள்ள இந்த வார்த்தை பிரயோகம் இல்லை....அது மட்டும் எல்லாம் இரண்டு மனைவி வைதிருப்பது சட்ட விரோதமான செயல் அப்படின்னு தான் எனக்கு தெரியும். அது சரி, இவங்க முடிஆட்சி (
http://chuttikurangu.blogspot.com/2009/04/blog-post_13.html) நடக்குதுன்னு சொன்னதுக்கு அப்புறம் இந்த polygamy பத்தி என்ன சொல்றது) யாரும் கேக்குறது இல்லை. வீட்ல அவர் பேச்சை யாருமே கேக்குறது இல்லை. எல்லாம் தி.க தொண்டர்களும் நாத்திகம் follow பண்ணட்டும், தலைவர் family மட்டும் ஆத்திகம் follow பண்ணட்டும்.

வாழ்க வளமுடன் !

4 comments

தமிழ்நாட்டின் சக்கரவர்த்தியும், குறுநில மன்னர்களும்

நான் பொய் சொல்ல விரும்பவில்லை அப்படிங்கற தலைப்புல குமுதம் ரிப்போர்ட்டர் ள்ள ஒரு கொடுமைய படிச்சேன். அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்த்துக்கும், நம்ப சீவலபேரி பாண்டி புகழ் நெப்போலியன்க்கும் பெரம்பலூர் தொகுதிமேல நாலு கண்ணு (ஆளுக்கு இரண்டு கண்ணுள்ள ;)) !! நீங்க சீட் கிடைக்காம கொஞ்சம் புகையிர மாதிரி இருக்கே அப்படின்னு ராமஜெயம் அவர்களிடம் கேட்டதுக்கு இப்படி ஒரு பதில்..
//
தி.மு.க. தலைமை ஒரு சக்கரவர்த்தி மாதிரி. நாமெல்லாம் குறுநில மன்னர்கள் மாதிரி.
//
அது சரி, தலைப்பே "நான் பொய் சொல்ல விரும்பவில்லை"தானே..அது தான் வெளிபடையா சொல்லிட்டாரு.
//
சக்கரவர்த்தி சொல்வதை நாம் கேட்கவில்லை என்றால் நமக்குக் கீழே இருக்கும் மக்கள் எப்படி நாம் சொல்வதைக் கேட்பார்கள்?
//
அட பாவிகளா, மக்களாட்சி அப்டினா மக்களால தேர்தெடுக்க பட்ட தலைவர்கள் மக்களக்கு சேவை செய்றதுன்னு நான் நினச்சு கிட்டு இருந்தேன். அது சரி, அவர் தான் நாங்க எல்லாம் ராஜா மாதிரி , மக்கள்(தொண்டர்கள்) எல்லாம் அடிமைகள் மாதிரின்னு சொல்லிட்டாரே..

சரி, வந்தது வந்துடிங்க இந்த பாட்டை பாத்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகோங்க !!!


4 comments

விஜயகாந்த் - மூணு சீட்டு - வாய்ஸ்



(நன்றி : குமுதம் )

விஜயகாந்த் அங்கிள் விழுப்புரம்,பாண்டிச்சேரி, திருவண்ணாமலை இந்த மூன்று தொகுதிலயும் அதிக நேரம் (அப்புறம் நல்ல மக்களை கவர் பண்ணற மாதிரி பிரச்சாரம்) பண்ணினா கண்டிப்பா  மூணு MP seat கிடைக்கும் !! ஆமா சொல்லிட்டேன் ! அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம் !

இன்னொரு கேப்டன் news (நன்றி: தினமணி)