பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார் : பழ.நெடுமாறன்

பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார் : பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியை முழுமையாக மறுத்திருக்கிறார், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினரைப் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... பிரபாகரன் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

தற்போது, இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு, சர்வதேச சமுதாயம் முழுவீச்சில் இலங்கை அரசை வலியுறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தச் சூழலில், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்களைப் பரப்பி, சர்வதேச சமுதாயத்தின் பார்வையை திசைத் திருப்பவே இலங்கை அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தமிழ் மக்களும், சர்வதேச சமூகமும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார் பழ.நெடுமாறன்.
 
Source : Vikatan

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in